சேமிப்பு மற்றும் தற்போதைய கணக்கை பராமரிக்கும் பற்றுவரவு ஏட்டை புதிநிலைக்குக் கொணர்தல்
சேமிப்பு மற்றும் தற்போதைய கணக்கை பராமரிக்கும் பற்றுவரவு ஏட்டை புதிநிலைக்குக் கொணர்தல்
U.CO.POT.PCB.Cir/02/09.11.00/2002-03 18 ஜூலை 2002
அனைத்து முதன்மை நகர
கூட்டுறவு வங்கிகளின் தலைமை
செயல் அலுவலர்களுக்கும்
அன்புள்ள ஐயா/அம்மணி,
சேமிப்பு மற்றும் தற்போதைய கணக்கை பராமரிக்கும் பற்றுவரவு ஏட்டை புதிநிலைக்குக் கொணர்தல்
சில வங்கிகள் பற்று வரவு புது நிலைக்குக் கொணரும்பொழுது, கணினி மூலமாக பதிவுகள் செய்யப்படும் நிலையில் அப்பதிவுகளில் காசோலை எண் யாரிடமிருந்து பெறப்பட்டது போன்ற விவரங்கள் இருப்பதில்லை என்பதனை ரிசர்வ் வங்கியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. “கணக்குத் தீர்வால்” அல்லது “கணக்குத் தீர்விற்கு” என்று குறிப்பிடப்படுவது குழப்பமளிப்பதாகவும் குறிப்பாக பல்வேறு தேதிகளில் அதே தொகை தோற்றமளிக்கிறது.
சிறந்த வாடிக்கையாளர் சேவைக்காகவும், கணக்கு வைத்திருப்போரின் குறைகள் களையப்படவும், வங்கிகள் முழு அளவிலான விவரங்களைத்தர முனைந்திட, ஒவ்வொரு பரிவர்த்தனையின் எல்லா விவரஙளையும் உள்ளடக்கிய புதுப்பிக்கப்பட்ட எற்பாடுகளைத் தந்திட வேண்டும். பணம் எடுப்பு வாடிக்கையாளர் விடுத்த காசோலைகளாக இருந்து அவை வங்கிகளின் காசோலை பரிவர்த்தனை நிலையங்கள் மூலமாக அறிவிக்கப்பட்டவையாக இருந்தாலோ அல்லது மின்னனு ப்ரிவர்த்தனை சேவை மூலமாகவோ வநதிருக்கலாம்.
உங்கள் நம்பிக்கைகுரிய
எஸ்.வி.சாரப்
உதவி பொது மேலாளர்
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: